Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில், 80% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலே பாதிப்பு: ஐசிஎம்ஆர் கவலை

ஏப்ரல் 20, 2020 11:51

சென்னை: எந்தவித அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், இன்று காலை வரை 17, 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.265 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கை: காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 80% பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்