![](admin/uploads/.5f4bc2d435b5c8.59623240.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை:மதுரையில் கொரோனாவிடம் இருந்து நேற்று மேலும் 8 பேர் மீண்டதால் குணமானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாததால், பாதித்தோர் எண்ணிக்கை 46ல் தொடர்கிறது. நேற்று முன்தினம் வரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் பலியானார். 26 பேர் சிகிச்சையில் இருந்தனர்.மேலும் 8 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர். அவர்களை கலெக்டர் வினய், டீன் சங்குமணி, முன்னாள் டீன் மருதுபாண்டியன், கொரோனா வார்டு பொறுப்பாளர் பிரபாகரன் மற்றும் நர்ஸ்கள், பணியாளர்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினர்.
வழியனுப்பும் நிகழ்ச்சியில் பேசிய நோயில் இருந்து மீண்ட ஒருவர், ‛'தனியாரை விட தரமான சிகிச்சையை அரசு மருத்துவமனையில் பெற்றோம். டாக்டர், நர்ஸ்கள் நன்றாக கவனித்தனர். தினமும் பார்வையிட்டு நலம் விசாரித்தனர். மனதளவில் உத்வேகம் அளித்தனர். சத்தான உணவு, அதிகளவில் பழங்கள் வழங்கினர். நோய் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை,'' என்றனர்.