Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துறையூரில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

ஏப்ரல் 21, 2020 11:10

திருச்சி: துறையூா் அருகே உரிமமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவரை கைது செய்தனா்.

உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காஞ்சேரிமலை முத்துசாமி மகன் சுந்தரம் (50) உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தாா். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் உப்பிலியபுரம் காவல் நிலைய உதவிஆய்வாளா் ராம்குமாா் தலைமையில் போலீஸாா் அவருடைய வீட்டுக்குச் சென்று விசாரித்தனா்.

அப்போது சுந்தரம் தனது வீட்டுக்கு பின்புறமிருந்த ஆட்டுப்பட்டியில் உரிமமில்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் அந்த துப்பாக்கியைப் பறிமுதல் வழக்குப் பதிவு செய்தனா்.

தலைப்புச்செய்திகள்