Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உல்லாசத்துக்கு இடையூறால், சிறுவன் சித்ரவதை செய்து கொலை: தாய், கள்ளக்காதலன் கைது

ஏப்ரல் 21, 2020 12:03

கோவை: கோவை அருகே உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த மகனை அடித்து கொடுமை படுத்தி கொலை செய்த விவகாரத்தில் தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் அருண். இவருடைய மனைவி திவ்யா. இவர்களுக்கு 6 வயதில் அபிஷேக் மற்றும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அருண் கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக திவ்யா கணவரை விட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவில்மேட்டில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள மிக்சர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திவ்யாவுக்கு அங்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜதுரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவரும் கணவன், மனைவி போல வாழத் தொடங்கினர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ராஜதுரை, திவ்யா மற்றும் இரண்டு குழந்தைகளும் ஒரே வீட்டில் இருந்துள்ளனர்.

அப்பொழுது இருவரும் உல்லாசமாக இருப்பதற்கு சிறுவன் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் சேர்ந்து சிறுவனை கடந்த சில நாட்களாகவே பிரம்பால் சரமாரியாக அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். சிறுவன் துடிதுடித்து வீட்டில் முனங்கியபடி இருந்துள்ளான்.

உடலில் பல இடங்களில் வீக்கம் ஏற்பட்டதால் டாக்டரிடம் சென்றால் போலீசில் சிக்கி விடுவோம் என்று கருதி மருந்துக்கடையில் போய் வலிநிவாரணி மருந்துகளை வாங்கி திவ்யாவும், ராஜதுரையும் சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை முதல் சிறுவன் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து சிறுவனை பரிசோதனை செய்தனர். அப்பொழுது சிறுவன் அபிஷேக் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சாய்பாபா காலனி போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா சிறுவனின் இறப்பு குறித்து கொலை வழக்காக பதிவு செய்து, சிறுவனின் தாய் திவ்யா அவருடைய கள்ளக்காதலன் ராஜதுரை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடுமைப்படுத்தி தாயே அடித்துக் கொன்ற சம்பவம் கோவையில் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்