![](admin/uploads/.608fce9fd658c0.89600339.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் சோதனை கருவி மூலம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ரத்த மாதிரிகளை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து சோதனை செய்து கொண்டனர்.
முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சோதனை குறித்து சுகாதார துறையினரிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது:
கோவை மாவட்டத்தில் இதுவரை 133 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கணிசமான நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்கள். கோவை மாநகரில் 10 பகுதிகளும், மாவட்டத்தில் 8 பகுதிகளும் தனிமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யார் மூலமும் தொற்று இல்லை என்பதை உறுதி படுத்தும் வகையில் பணியாற்றி வருகிறோம். கோவை மாவட்டத்திற்கு 2,000 ரேபிட் கிட் வந்துள்ளது. அதில் 1,000 ரேபிட் கிட் பயன்படுத்தபட்டுள்ளது. கூடுதலாக 1,200 கிட் கோவைக்கு வர உள்ளது. புதிய ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யபட்டதில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது. இன்று ஆட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு சோதனை நடத்தப்படும்.
மேலும் எங்கெல்லாம் தேவை உள்ளதோ அங்கெல்லாம் ரேபிட் கிட் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பினி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக அங்குள்ள பிரசவ வார்டு சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த வால்பாறை, ஊஞ்வேலாம்பட்டி, ஆத்துப்பாலம் பகுதிகளைச் சேர்ந்த 3 பெண்களுக்கு டிராவல் ஹிஸ்டரி இல்லை. பிரசவ வார்டு மீதுள்ள சந்தேகத்தின் காரணமாக அந்த வார்டை மூட சொல்லி உத்திரவிட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.