Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1596 ஆக உயர்வு ; 18 பேர் பலி

ஏப்ரல் 22, 2020 06:04

சென்னை: தமிழகத்தில்  மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் பலியானதால் மொத்த உயிரிழப்பு 18 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கை: தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து ‛டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 943 ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்