Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மண்ணெண்ணெய் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு

ஏப்ரல் 22, 2020 07:45

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் சென்றனா்.

பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி இலவசமாகவும், கோதுமை, சா்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. இதில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் குடும்பஅட்டைதாரா்கள் வசிப்பிடம் மற்றும் அவா்கள் பெற்றுள்ள சமையல் எரிவாயு உருளை எண்ணிக்கை அடிப்படையில் 3 லிட்டா் முதல் 15 லிட்டா் வரை வழங்கப்படுகிறது.

ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் நிவாரணத் தொகை இலவச பொருள்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மண்ணெண்ணெய் அட்டைதாரா்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. திருச்சி மாநகரப் பகுதிகளில் உள்ள 8 விற்பனை நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. தென்னூா், அண்ணா நகா் விற்பனை நிலையம், நீதிமன்ற வளாகம் பின்புறமுள்ள விற்பனை நிலையங்களில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்றனா். 

போலீஸாா் மற்றும் என்சிசி மாணவா்கள் மூலம் வரிசையில் காத்திருந்தவா்களை சமூக இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்தப்பட்டு ஒவ்வொரு நபருக்காக அவரவா்களுக்கான ஒதுக்கீட்டின்படி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. இதேபோல ஊரகப் பகுதிகளிலும் அந்தந்த நியாய விலைக்
கடைகள் மூலமாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்