Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1629 ஆக உயர்வு ; 18 பேர் பலி

ஏப்ரல் 22, 2020 03:06

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,22) மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கை: தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 23,760 பேரும், அரசு கண்காணிப்பில் 155 பேரும் உள்ளனர். ஒரே நாளில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 946 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்