Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர்களுடன் ஏப். 27-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை

ஏப்ரல் 22, 2020 03:09

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கை மே. 3 வரை நீட்டித்துள்ள நிலையில், வரும் ஏப். 27-ம் தேதியன்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் மூன்றாவது முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா வைரஸ், இந்தியா முழுதும் வேகமாக பரவி வருகிறது. இங்கு, இந்த வைரசால், 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 650 -க்கும் மேற்பட்டோ உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. தற்போது நாடு முழுதும் ஊரடங்கு மே. 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், கடந்த ஏப். 2 மற்றும் 11-ம் தேதி என இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் வரும் ஏப். 27-ம் தேதி மாநில முதல்வர்களுடன் மீண்டும் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

தலைப்புச்செய்திகள்