![](admin/uploads/.6346683d37a242.71978182.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆம்பூர்: பேர்ணாம்பட்டு மளிகை தெருவை சேர்ந்தவர் முகமதுசபான் (வயது22). வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் முகமது இம்ரான் (22). உசேன் (21). முசமில் (22). சல்மான் (22). துபால் (21). மற்றொரு சல்மான் (21). ஆகியோருடன் குடியாத்தம் மேல்ஆலத்தூரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு காரில் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து ஏலகிரி மலைக்கு சென்றனர். அங்கிருந்து நள்ளிரவு வீட்டிற்கு காரில் திரும்பினர். ஆம்பூர் அருகே அய்தம்பட்டு சின்னவரிக்கம் கூட்ரோடு அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே முகமதுசபான், முகமது இம்ரான், உசேன் ஆகிய 3 பேர் பலியாகினர். இறந்த 3 பேரும் கல்லூரி மாணவர்கள். இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழிலேயே முசமில் உயிரிழந்தார். துபால், சல்மான் மற்றொரு சல்மான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.