Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்: பெற்ற தாய், தந்தையை கொன்ற மகன்

ஏப்ரல் 23, 2020 07:27

செங்கம்: திருவண்ணாமலை அருகே பெற்ற தாய், தந்தையை திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த நிலையில் மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம்  செங்கம் அடுத்த குப்பந்தாங்கல் அருந்ததியர் காலனியில் வசித்துவந்தவர் கோவிந்தசாமி(60) மாங்கனி(50) அவர்களுடைய மகன் ராம்குமார் (27)இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் இரு நாட்களுக்கு முன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார் இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராம்குமார் அருகாமையில் உள்ள விவசாயகினற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை லேசனகாயங்கலுடன் மீட்டுள்ளனர். இருந்தாலும் தாய்,தந்தை என்று கூடபார்காமல் அவர்கள் தூங்கும் போது தலையில் அம்மிகல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு  தப்பித்தார்.

தகவலறிந்த செங்கம் போலீஸார், கோவிந்தசாமி, மாங்கனி ஆகிய இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக சுற்றித்திரிந்த ராம்குமாரை திருவண்ணாமலையில் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்