Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா: 22 பேர் பலி

ஏப்ரல் 25, 2020 06:24

சென்னை: தமிழகத்தில்  மேலும் 72 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 2 பேர் உயிரிழந்ததால், மொத்தம் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 2 பேர் உயிரிழந்ததால் மொத்தம் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வீட்டுக்கண்காணிப்பில் 25,503 பேரும், அரசு கண்காணிப்பில் 19 பேரும் உள்ளனர். 28 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் முடித்தவர்கள் எண்ணிக்கை 87,159 ஆக உள்ளது. ஒரே நாளில் 114 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 864 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்