Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் ஊரே அடங்கி இருக்கும் போது தைல மரத்தோப்பில் காதலர்கள் உல்லாசத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக போலீஸ் குழுவினர் ஆளில்லா விமான கேமராவை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பட்டுபள்ளி கிராமம் அருகே உள்ள தைல மரத்தோப்பில் நேற்று மதியம் உச்சி வெயிலில் காதல் ஜோடி ஒன்று ஊரடங்கு நேரத்தில் உல்லாசமாக இருந்தது கேமரா மூலம் கண்டறியப்பட்டது. அப்போது அந்த கேமராவை பார்த்தவுடன் காதலன் ஹெல்மெட்டை போட்டு கொண்டார். அந்த இளம்பெண் காதலன் மடியில் இருந்து வேகமாக எழுந்து துப்பட்டாவால் தனது முகத்தை மறைத்து கொண்டார்.
பின்னர் அந்த காதல் ஜோடியினர் அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு தலைதெறிக்க ஓடினர். அதைத்தொடர்ந்து, மோட்டார் சைக்கிளின் பின்னால் காதலி அமர்ந்து கொள்ள ஒருவழியாக அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி மறைந்து சென்றனர்.
ஊரே அடங்கி இருக்கும் போது தைல மரத்தோப்பில் காதலர்கள் உல்லாசத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.