Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாகை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம்

ஏப்ரல் 25, 2020 10:48

நாகை: நாகை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; நாகை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. முக கவசம் கட்டாயம் அணிய
வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்வது தவறான செயலாகும்.

நோய் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அவ்வாறு முக கவசம் அணியாமல் வெளியில் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மளிகை மருந்து கடைகள் உழவர் சந்தைகள் பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் அத்தியாவசிய தேவைகளுக்காக மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே வர வேண்டும். மோட்டார் சைக்கிள்களின் பின் இருக்கையில் எவரும் உட்காரக்கூடாது. தேவையில்லாமல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சுற்றினால் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் வாகனம் பறிமுதல் செய்யப்படும். பொது இடத்தில் எச்சில் துப்புபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்