![](admin/uploads/.5f6c79761a6c66.17707717.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் இன்று (ஏப்.,25) ஒரே நாளில் 43 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 66 பேரில் சென்னையில் மட்டும 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது. இன்று, காஞ்சிபுரத்தில் 7 பேரும், தென்காசியில் 5 பேரும், மதுரையில் 4 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை, குன்றத்தூரை சேர்ந்த 34 வயதுடைய நபர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்றிரவு கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆனது.