Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி: தமிழக அரசு அறிவிப்பு

ஏப்ரல் 28, 2020 06:36

சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5கிலோ அரிசி வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் பாதிக்காத வண்ணம் தமிழக அரசு அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. நேற்றைய தினம் சென்னை உட்படஅனைத்து ஊரட்சிகளிலும், குடிநீர் கட்டணம், சொத்துவரி செலுத்துவதற்கு ஜூன் 30 ம் தேதி வரையில் அவகாசம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்