Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடை வியாபாரிக்கு கொரோனா தொற்று

ஏப்ரல் 28, 2020 07:29

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் மேலும் ஒரு வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2 வியாபாரிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மார்க்கெட்டை இரண்டாகப் பிரித்து சமூக இடைவெளியை உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று வரை வியாபாரம் செய்த பூக்கடை வியாபாரிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் காவல்துறை மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தினர். மொத்த வியாபார கடைகளை மட்டும் கோயம்பேடு சந்தையில் செயல்படவும், சிறு வியாபாரிகளுக்கு வேறு இடங்களில் வியாபாரம் செய்யவும் சிஎம்டிஏ அனுமதி அளித்தது. இதனை ஏற்க சிறு வியாபாரிகள் மறுத்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்