Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் காற்றுடன் மழை; வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

ஏப்ரல் 29, 2020 11:07

திருச்சி: திருச்சியில் காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

திருச்சியில் சமீப நாட்களாக வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே கொரோனாவால் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள் வெயிலின் கோரப்பிடியிலும் சிக்கி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவில் கூட நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சியில் இடி மின்னலுடன் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலைய சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மழையின் காரணமாக இரவு வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்து குளிர்ச்சி நிலவியது.

இதேபோல சமயபுரம் மண்ணச்சநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டியது. மழையையும் பொருட்படுத்தாது பால் வியாபாரிகள் மழைக் கோட்டு அணிந்தபடி வீடுகளுக்கு சென்று பால் வினியோகம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்