Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 27 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், தற்போதைய நிலையில், அரசு சார்பில் 33 ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்கள் செயல்படுகின்றன. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், 3 ஆய்வகம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,09,961 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. 1,05, 864 மாதிரிகளில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. இன்று மட்டும் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் 63 பேர் ஆண்கள். 41 பேர் பெண்கள். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,162 ஆக அதிகரித்துள்ளது. ( 1,455 ஆண்கள்/707 பெண்கள்).
1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 82 பேர் வீடு திரும்பியுள்ளனர். 922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டு கண்காணிப்பில் 30,580 பேர் உள்ளனர். கொரோனா பாதித்த இருவர், இன்று சென்னையில் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. பொது மக்கள் வெளியில் சென்றால், மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.