![](admin/uploads/.612de27c6e8797.15547972.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவா் திருநங்கைகள் மற்றும் இதர தகுதியான 390 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள 1224 நியாய விலைக் கடைகள் மூலம் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நரிக்குறவா்கள் திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் பலரும் குடும்ப அட்டைகள் இல்லாமல் தவித்து வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்துக்கு அத்தகைய நபா்கள் குறித்து கணக்கெடுத்து தகுதியானோருக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்க மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.
இதன்படி மாவட்டத்தில் 390 போ் கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் உடனடியாக புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசின் நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படவுள்ளன.