Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 1082 ஆக உயர்வு

மே 01, 2020 02:42

சென்னை: சென்னையில் இன்று (மே 01) ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 203 பேரில் சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இது தமிழகத்தின் பாதிப்புகளில் 43 சதவீதம் ஆகும். செங்கல்பட்டில் 8 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், மதுரையில் 3 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 150 பேர், 13 முதல் 60 வயதுள்ளவர்கள் 2110 பேர், 60 வயதை கடந்தவர்கள் 266 பேர் உள்ளனர். தமிழகத்தல் தற்போது 12 ரெட் ஜோன் மாவட்டங்களும், 24 ஆரஞ்சு ஜோன் மாவட்டங்களும், ஒரு கிரீன் ஜோன் மாவட்டங்களும் உள்ளன.

தலைப்புச்செய்திகள்