Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேமுதிக வேட்பாளர் பட்டியல் 4 நாட்களில் வெளியாகும்: பிரேமலதா

மார்ச் 13, 2019 05:54

மதுரை: தே.மு.தி.க. சார்பில் எந்தெந்த தொகுதியில் யார், யார் போட்டியிடுவார்கள்? என்பது குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று பிரேமலதா கூறினார். மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இன்று நிருபர்களிடம் கூறியதாவது. 

பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் பலாத்கார சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் யாரிடம் பழகினாலும் ஆராய்ந்து பழக வேண்டும். தே.மு.தி.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று நேர்காணல் நடத்துகிறார். அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் எந்தெந்த தொகுதிகள், எந்தெந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது தெரியவரும். 

தே.மு.தி.க. சார்பில் எந்தெந்த தொகுதியில் யார், யார் போட்டியிடுவார்கள்? என்பது குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும். கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் அறிவிப்பே இறுதியானதாகும். இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்