![](admin/uploads/.5d2f40859cbda5.23379360.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: திருப்பூரில் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை இந்து முன்னணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வழங்கினார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக 144 தடை உத்தரவு நிலவி வருவதால் திருப்பூரில் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இந்து முன்னணி சார்பாக 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு 1 வாரத்திற்கு தேவையான அரிசி, மளிகை தொகுப்பு பொருள்கள் மற்றும் காய்கறிகள் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செந்தில் குமார் மற்றும் மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிகண்டன், கேசவன், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.