Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்முவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 பேர் மரணம்

மே 03, 2020 02:02

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் வடக்கில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக சமீபத்தில் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் அதிரடி தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனால் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து சஞ்முல்லா பகுதியில் இருதரப்பினரிடையே பயங்கர மோதல் நடைபெற்றது. அப்போது பொதுமக்களையும் பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகவும் பிடித்து வைத்தனர். இவர்களை மீட்க கூடுதல் பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

இம்மோதல் கடந்த 24 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. இம்மோதலில் 21-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் கர்னல் அஸுதோஷ் ஷர்மா உட்பட 5 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்