![](admin/uploads/.5f7c597cec2076.05030209.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: நாம் எனப்படும் அணி சேரா நாடுகளி்ன் மாநாடு இன்று நடக்கிறது. வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொள்ள உளளார்.
நாம் எனப்படும் அணி சேரா நாடுகள் அமைப்பு ஐ.நா. போன்று மிகப்பெரிய அமைப்பாகும். இதில் ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 120 வளர்ந்து வரும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆன்லைன் வாயிலாக நடக்க உள்ள இந்த மாநாட்டிற்கு அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமை தாங்குகிறார்.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில் இன்று நடக்க உள்ள டிஜிட்டல் மாநாட்டின் போது கொரோனா வைரசிற்கு எதிராக இந்தியா தொடுத்து வரும் போர், நாம் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள ஒருங்கிணைப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், “கோவிட் -19 எதிராக ஒன்றிணைத்தல்” என்ற இயக்கத்தின் அரசியல் பிரகடனம் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.