Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு: பினராயி அறிவிப்பு

மே 04, 2020 07:32

திருவனந்தபுரம்: கேரளாவில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் பொது இடங்களில் காய்ச்சலை கண்டறியும் நவீன கேமராக்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக நெதர்லாந்து நாட்டில் இருந்து நவீன கேமராக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு கேமராவின் விலை 7 லட்சம் ரூபாய். இந்த கேமராக்களை பொருத்தும் பணி ஓரிரு நாளில் தொடங்குகிறது.

பஸ் ஸ்டாண்ட் ரயில் நிலையம் போன்ற இடங்களில் மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை வேகமாக கண்டறியும் கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில்தான் முதலில் இந்த கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. கேரளாவில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்