Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் இன்று முதல் வங்கிகள் முழு நேரம் இயங்குகிறது

மே 04, 2020 07:39

சென்னை: வங்கிகள் இன்று (மே 4) முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை: வங்கி பணியிடங்களிலும் வைரஸ் பரவுவதை தடுக்கபல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; வங்கிகளின் வேலை நேரமும் மாற்றி அமைக்கப்பட்டது. ஏப். 14 முதல் தற்போது வரை மதியம் 2:00 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படுகின்றன.

தமிழக அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வழிமுறைகளில் மாலை 5:00 மணி வரை அத்தியாவசிய கடைகள் மற்றும் பிற கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கிகள் இன்று முதல் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும்.

வங்கி கிளைகளில் 50 சதவீத ஊழியர்கள் அதிகாரிகள் பணியாற்றலாம். மீதமுள்ளோர் வீட்டிலிருந்து மாற்று முறையில் பணியாற்றலாம். எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்