Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குமரிக்கு சென்னையில் இருந்து வந்த 100 பேரை தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை

மே 04, 2020 07:44

நாகர்கோவில்: சென்னையில் இருந்து குமரி மாவட்டம் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை ஆரல்வாய் மொழி சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

சென்னையில் இருந்து குமரி மாவட்டம் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை ஆரல்வாய் மொழி சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் 100 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட சிலரை அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் தங்க வைத்துள்ளனர். மீதம் உள்ளவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

 கோயம்பேட்டில் இருந்து வந்த 8 பேரும் இந்த சோதனையில் சிக்கினார்கள். அவர்களின் ரத்த மற்றும் சளி மாதிரிகளும் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்