Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இந்தியாவில் இன்று (மே 05) காலை 9 மணி நிலவரப்படி, 46,433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,568 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,836 லிருந்து 46,433 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1,389 லிருந்து 1,568 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 11,762 லிருந்து 12,727 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,573 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 83 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.