Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 7-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது: தமிழக அரசு அறிவிப்பு

மே 05, 2020 06:38

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

 இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மே 7-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்