Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 49,391 ஆக உயர்வு : 1,694 பேர் பலி

மே 06, 2020 07:56

புதுடெல்லி: இந்தியாவில் இன்று (மே 06) காலை 9.15 மணி நிலவரப்படி, 49,391 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,694 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,836 லிருந்து 49,391 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1,568 லிருந்து 1,694 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 12,727 லிருந்து 14,183 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 15,525 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்