![](admin/uploads/.6056fa4e8cc1f9.54862506.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் புதிதாக 279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,008 ஆக அதிகரித்தது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4058ஆக அதிகரித்தது. புதிதாக 76 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,485 பேர் குணமாகி உள்ளனர்; 33 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,008 ஆக அதிகரித்தது. சென்னையை சேர்ந்த 56 வயது ஆண், 60 வயது பெண் உயிரிழந்ததையடுத்து, அங்கு பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 1,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.