Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா

மே 07, 2020 03:44

சென்னை: சென்னையில் நேற்று புதிதாக 324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்தது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில்  771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 4,829 ஆக உயர்ந்தது. இன்று 2 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி 35 ஆனது.

சென்னையில்  ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்தது. 330 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். 1,975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்