Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடிநீர் தொட்டியில் சாணத்தை கரைத்து மாசுபடுத்திய வார்டு உறுப்பினர் கைது

மே 07, 2020 10:09

திருச்சி: புள்ளம்பாடி அருகே குடிநீர் தொட்டியில் சாணத்தை கரைத்து மாசுபடுத்திய ஊராட்சி வார்டு உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரத்தூர் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் தரைமட்ட தொட்டியில் அந்த கிராமத்தை சேர்ந்த ஊராட்சி வார்டு உறுப்பினர் சக்திவேல் (27) சம்பவத்தன்று மாட்டு சாணத்தை கரைத்தார்.

இதனால் குடிநீர் தொட்டியில் இருந்த நீர் மாசடைந்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுபற்றி அறிந்த கிராம நிர்வாக அதிகாரி அந்தோணி ராஜா வார்டு உறுப்பினரிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் அவருக்கு சக்திவேல் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்