Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தியாகராஜர் பிச்சை எடுக்கவில்லை; நீ தான் விஸ்வரூபம் பட பிரச்னையில் பிச்சை எடுத்தாய்: கமல் மீது பாடகர் வீரமணி கடும் விமர்சனம்

மே 08, 2020 11:30

சென்னை: சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி உடனான நேரலை கலந்துரையாடலில் தனது சினிமா பயணம் பற்றி பேசுகையில் தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார், அவரை மாதிரி நான் வாழ விரும்பவில்லை என்றார். இவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பக்திபாடகர் வீரமணி கூறுகையில், தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார் என்று யார் சொன்னது. நீ தான் விஸ்வரூபம் படம் வெளிவரவில்லை, என் பணம் எல்லாம் போச்சு, இந்த நாட்டை வீடு ஓடுகிறேன் என பிச்சை எடுத்தாய். அன்றைக்கே நீ நாட்டை விட்டு போய் இருக்கலாம். 

தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுக்கவில்லை. அவரின் பக்தி பற்றி உனக்கு தெரியுமா, அவரை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் பெயரை உச்சரிக்க கூட கமலுக்கு தகுதியில்லை. இதுபோன்ற மகான்களை பேசினால் பேசுவதற்கு நாக்கே இருக்காது. 

ஏன் இப்படி பாவத்தை சேர்க்கிறாய், ஏற்கனவே நிறைய பாவம் செய்துள்ளாய். இதை இன்னும் சேர்க்காதே. மக்களும் இது போன்ற விஷக்கிருமிகளை உணர்ந்து கொள்ள வேண்டும். கமலுக்கு அனைவரும் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கணும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தலைப்புச்செய்திகள்