![](admin/uploads/.5f3ea08a294af8.04973065.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா நகரான ஆக்ரா, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களில் 294 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதுவரை 20 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஆக்ராவில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியின் கொரோனா தனிமை வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது மதிக்கதக்க பத்திரிகையாளருக்கு, புதனன்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.