![](admin/uploads/.5d5baefce1ce47.10043316.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கே. அய்யம்பாளையம். இப்பகுதியில் வசித்துவருபவர் பொன்னுசாமி(36). கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது நண்பர் செல்வத்துடன் மது குடித்துவிட்டு குடிபோதையில் இருவரும் அங்குள்ள மேல் நிலைத்தொட்டியின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டுவந்து இருவரையும் கீழே இறங்கிவருமாறு கூறியுள்ளனர்.
இதனை அடுத்து செல்வம் மட்டும் கீழே இறங்கிவந்துள்ளார். ஆனால், பொன்னுச்சாமி போதை தலைக்கேறி தொட்டி மீதிருந்து இறங்க மறுத்துள்ளார். இதனை அடுத்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இதனை அடுத்து தொட்டி மீதேறி பொன்னுசாமியை தீயணைப்புதுறையினர் மீட்க முயன்றபோது தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். இதனை அடுத்து கயிற்றின் மூலமாக பொன்னுசாமியை மீட்டு கீழே இறக்கி கொண்டுவந்தனர்.
இதையடுத்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.