Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,535 ஆக உயர்வு ; 44 பேர் பலி

மே 09, 2020 02:49

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 09) மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகள் எண்ணிக்கை 6,535 ஆகவும், பலி எண்ணிக்கை 44 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 526 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை சேர்ந்த 67 வயது, 58 வயது, 73 வயதான 3 பெண்கள், மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 70 வயதான பெண் என கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,664 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்