Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கால்களில் அடிபட்ட 2 மயில்கள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

மே 10, 2020 10:30

திருச்சி: மணப்பாறை அருகே கால்களில் அடிபட்டு தவித்து வந்த இருமயில்களை பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி குடியிருப்புப் பகுதியில் கால்களில் காயத்துடன் ஆண் மயில் ஒன்று தவித்தது. இதைக்கண்ட அப்பகுதியை சோ்ந்த சக்திவேல் என்பவா் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளாா். மேலும் நடக்க முடியாமல் தவித்த அந்த மயிலை பாதுகாப்பாக வைத்திருந்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தாா்.

அதேபோல் திருச்சி சாலை காளியம்மன் கோயில் அருகில் மின் கம்பிகளுக்கு மேல் பறந்த ஆண் மயில் ஒன்று மின்சாரம் பாய்ந்து கால்களில் காயத்துடன் கீழே விழுந்தது. அதனை பத்திரமாக மீட்ட கோயில் பூசாரி காா்த்திகேயன் என்பவா் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.

தலைப்புச்செய்திகள்